Monday 21 July 2014

Tagged Under: ,

எந்திரன் 2-ல் சிரஞ்சீவி நடிக்கிறாரா ? என்ன நடக்கப்போவுது..?

By: ram On: 21:29
  • Share The Gag
  •            பரபரப்புக்காக எதையாவது கிளப்பி விடுவதில் நம்மவர்களை மிஞ்சுவதற்கு ஆட்கள் கிடையாது. ரஜினி மீண்டும் 'லிங்கா' படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின. இதற்காக 250 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் ஷங்கர் தயாராகி வருகிறார் என்றனர்.

    இதனிடையே 'எந்திரன் 2'ம் பாகத்தில் அமீர் கான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், தனக்கு அப்படி எதுவும் எண்ணமில்லை என்று அமீர்கான் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி 'எந்திரன் 2'-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவி விரைவில் அவருடைய 150 வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார். அதற்காக அவர் பல கதைகளைக் கேட்டு வருகிறார். இதனிடையே ஷங்கர் அவரைச் சந்தித்து 'எந்திரன் 2'ம் பாகத்தின் கதையைக் கூறியதாகவும் அந்த படத்தில் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

    'ஐ' படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் ஷங்கர் பிஸியாக உள்ளதால், அவரே 'எந்திரன் 2' படத்தைப் பற்றி வாய் திறந்தால் தவிர அந்த படத்தைப் பற்றி பல வதந்திகள் வந்து கொண்டுதானிருக்கும்.

    0 comments:

    Post a Comment