Monday, 3 November 2014

உலக அரங்கில் விஜய் சேதுபதி படம் திரையிடப்படுகிறது..!

எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியான திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் முதலானோர் நடித்திருந்தார்கள்.

அதோடு இப்படம் விமர்சன ரீதியாக பேசப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விரைவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா உலக அளவிலான பல மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

இந்த விழாவில் விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ தமிழ் படமும் திரையிடப்படுகிறது.

No comments:

Post a Comment