Monday, 13 October 2014

மணிரத்னத்தின் திடீர் முடிவு! ஆச்சரியத்தில் திரையுலகம்

மணிரத்னம் படங்கள் என்றாலே கிளாஸியாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். ஆனால், அவர் இயக்கி கடைசியாக ஹிட் ஆன படம் என்றால் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும்.

இவர் பெரிதும் நம்பியிருந்த கடல் படமும் கை விட்டது. இந்நிலையில் இனி பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பதில்லை, சுமார் ரூ 5 கோடியில் ஒரு படத்தை எடுத்து முடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் சில பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து வருகின்றனர்.

மணிரத்னத்தின் இந்த திடீர் மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment