Monday, 29 September 2014

வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை! வெளிவந்த உண்மை

வெற்றிமாறன் அடுத்து தனுஷை வைத்து சூதாடி என்ற படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் இவர் யாருக்கும் தெரியாமலேயே ‘அட்டகத்தி’ தினேஷை வைத்து விசாரணை என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டாராம்.

இப்படம் ஹாலிவுட் படங்களை போல் 1.30 மணி நேரம் தான் ஓடுமாம். இதுகுறித்து அவர் தரப்பில் ‘இது தான் மிகக் குறுகிய நேரம் கொண்டதாக வெளிவரும் முதல் வெள்ளித்திரை படம்’ என்று கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இப்படத்தின் ரிலிஸுக்கு பிறகே தனுஷ் படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment